Politics
திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி.. செல்வப்பெருந்தகை

தமிழ்நாட்டில் திமுக 2-வது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என தமிழ்நாட்டு மக்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பிப்ரவரி 18-ந் தேதி பேசிய செல்வப்பெருந்தகை, “ தொழிற்சாலைகள் நிறைந்த, திருப்பெரும்புதூர் தொகுதியில், பல ரோடுகள் பழுதடைந்து இருக்கின்றன.
நீங்கள் மீண்டும் 2-வது முறை ஆட்சிக்கு வருவது உறுதி என்பது தமிழ்நாட்டு மக்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இருந்த போதும் தேர்தலுக்கு முன்பாக, எந்தெந்த சாலைகளை பழுதுபார்க்க வேண்டுமோ அதை பார்த்து தருவார்களா? என்று கேட்க விரும்புகிறேன்” என்றார்.