Government

6 எம்.பி. இடங்கள்.. தமிழகத்தில் மார்ச் 16-ந் தேதி மாநிலங்களவை தேர்தல்! பிப்.26-ல் வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்!

தமிழகத்தில் மார்ச் 16-ந் தேதி மாநிலங்களவைத் தேர்தல் (ராஜ்யசபா தேர்தல்) நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் பிப்ரவரி 26-ந் தேதி தொடங்குகிறது.

10 மாநிலங்களின் 37 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக் காலம் ஏப்ரல் மாதம் முடிவடைகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி என்விஎன் சோமு, அதிமுக தம்பிதுரை, தமாகா ஜிகே வாசன் ஆகியோரது பதவிக் காலம் முடிவடைகிறது.

இதனையடுத்து தமிழகத்தின் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்கள் உட்பட 10 மாநிலங்களின் 37 எம்.பி இடங்களுக்கு மார்ச் 16-ந் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 26-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது.

  • வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம் பிப்ரவரி 26
  • வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசிநாள் மார்ச் 5
  • வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 6
  • வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 9
  • போட்டி இருந்தால் வாக்குப் பதிவு நடைபெறும் நாள் மார்ச் 16
  • வாக்குப் பதிவு நடைபெற்றால் மார்ச் 16- ந் தேதி மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை
  • தேர்தல் நடைமுறைகள் முடிவடையும் நாள் மார்ச் 20.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version