Government

கேஸ் தட்டுப்பாடு: டீ கடைகள் உட்பட அனைத்து ஹோட்டல்களுக்கும் மின் கட்டண சலுகை- தமிழக அரசு அதிரடி!

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து ஹோட்டல்களுக்குமான மின்சார கட்டணத்தில் தமிழ்நாடு அரசு அதிரடியாக சலுகையை அறிவித்துள்ளது.

சென்னையில் இன்று மார்ச் 14-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சார வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன், சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் மின்சார அடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் அனைத்து வகை உணவகங்களுக்கும் மின் கட்டணத்தில் ஒரு யூனிட்டுக்கு ரூ.2 சலுகை வழங்கப்படும் என அறிவித்தார்.

தமிழக அரசின் அறிவிப்புகள்:

  • உணவகங்கள், டீக்கடைகள், கிளவுட் கிச்சன் உள்ளிட்ட உணவு உற்பத்தி தொழிற்கூடங்கள் எரிவாயுவிற்கு (LPG) பதிலாக மின்அடுப்புகளை பயன்படுத்தும் போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும்.
  • ஒன்றிய அரசு அறிவித்துள்ள வணிக எரிவாயு பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் காலம் வரை இந்த மானியம் வழங்கப்படும்.
  • எரிவாயு (LPG) பயன்படுத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் மின் அடுப்புகள் மின் சூடேற்றிகள் உள்ளிட்ட மின் உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) கீழ், 25 சதவிகிதம் / அதிகபட்சமாக 3.75 இலட்சம் ரூபாய் மானியத்துடன் கடன் வழங்கவும், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 25 சதவிகிதம் / 2 இலட்சம் ரூபாய் மானியத்துடன் 10 இலட்சம் ரூபாய் வரை கடன் வழங்கவும் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 35 சதவிகிதம் / அதிகபட்சமாக 1 கோடி கொண்ட குழு செயல்படவும், இதேபோன்று மாவட்ட அளவில் எண்ணெய் விநியோக நிறுவனங்களின் பொறுப்பு அலுவலர்களை உள்ளடக்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குழு கண்காணிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
  • பொது விநியோகத் திட்டத்திற்கு கூடுதலாக 3228 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version