General

கானத்தூர்  ரெட்டிக்குப்பம் கடற்கரையில் 18 கோடி ரூபாய் மதிப்பிலான தூண்டில் வளைவு திட்டத்தினை ஒன்றிய பெருந்தலைவர் தொடங்கி வைத்தார்…!

கானத்தூர் ரெட்டிக் குப்பம் ஊராட்சியில் கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றம் அதிகரிப்பால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர் அதற்காக  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மக்களின் கோரிக்கையை ஏற்று  ரெட்டிக்குப்பம் கடற்கரையில் 18 கோடி ரூபாய் மதிப்பிலான தூண்டில் வளைவை திட்டத்தினை அறிவித்தார்.

இதை எடுத்து இத்திட்டத்தினை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் இதயவர்மன் இந்த நிகழ்வில் கானத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி எட்டியப்பன் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version