Connect with us

Economic

இந்தியாவில் தங்கம் இன்று ரிக்கார்ட் பிரேக்… ஒரு சவரன் ஒரு லட்சம் தாண்டியாச்சு.. புதிய வரலாறு தொடருமா?

சென்னையில் தங்கம் விலை இன்று (டிசம்பர் 15) ஒரு சவரன் ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச விலை நிலவரங்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித குறைப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு சவரன் தங்கம் ரூ.50,000த்தை தாண்டிய நிலையில் இன்று ரூ.1,00,000த்தை தாண்டி உள்ளது.

தற்போதைய தங்கம் விலை

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.90 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.55 உயர்ந்து ரூ.12,515க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ. 440 உயர்ந்து ரூ.1,00,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் ரூ.1160 வரை உயர்ந்துள்ளது.

இதேபோல் 18 கேரட் தங்கம் ரூ.10,440க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போதைய வெள்ளி விலை

சென்னையில் இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.3 உயர்ந்து ரூ. 213க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.2 உயர்ந்து ரூ.215க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,15,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 வரை உயர்ந்துள்ளது.

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

General16 hours ago

திருச்செந்தூர் கோவிலில் ரூ.100 விரைவு தரிசன மோசடியை உயர் அதிகாரிகள் கண்காணிக்க தவறியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.

General16 hours ago

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு.

Politics18 hours ago

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா …!

Politics18 hours ago

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Politics21 hours ago

சென்னை சோழிங்கநல்லூர் 198 வட்டக் கழகத்தின் சார்பில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Copyright © 2025 NowTamil.