Politics
சென்னை சோழிங்கநல்லூர் 198 வட்டக் கழகத்தின் சார்பில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் மத்திய பகுதி, 198 வது வார்டு வட்டக் கழக செயலாளர் காரம்பாக்கம் பா.தேவகுமார் தலைமையில், ஓஎம்ஆர் சாலை, காரம்பாக்கத்தில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் திருவருவப்படத்திற்கு, சோழிங்கநல்லூர் மத்திய பகுதி கழகச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. முன்னதாக, 198 வது வட்ட கழகம் சார்பில் இருவண்ணக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பிற அணிகளின் நிர்வாகிகள், கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணிகள் அனைத்தையும் திமுக-வின் 198-வது வட்டக் கழகச் செயலாளர் காரம்பாக்கம் பா.தேவகுமார் சிறப்பாக செய்திருந்தார்.