Connect with us

Politics

இந்தியா கூட்டணி தலைவர் ஸ்டாலின்… உத்தவ் தாக்ரே, திருமாவளவன் ஆதரவு!

இந்தியா கூட்டணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும் என்ற மணி சங்கர் அய்யரின் கருத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான என்.டி.ஏ-வை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்தன.

இந்த கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளார்.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணி சங்கர் அய்யர் ஏ.என்.ஐ ஊடகத்திடம் கூறுகையில், “’இந்தியா’ கூட்டணியை வ லுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் மிகச் சரியான நபர் மு.க.ஸ்டாலின். ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்குமாறு காமராஜரிடம் கேட்டபோது, அவர் அதைக் கேட்ட அனைவரிடமும் ஒரே ஒரு வாக்கியத்தைச் சொன்னார் – “ஆங்கிலம் தெரியாது, இந்தி தெரியாது… பிறகு எப்படி (பிரதமர் ஆவது)?” என்று கேட்டார்.

இப்போது மு.க.ஸ்டாலினும் அதே நிலையில் தான் இருக்கிறார். ‘இந்தியா’ கூட்டணியை ஒருங்கிணைப்பதற்காக யாராவது ஒரு நபர் முழு நேரத்தையும் செலவிட முன்வந்தால், ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமர் ஆக முடியும். அந்த ஒருங்கிணைப்புப் பணியைச் செய்ய ஸ்டாலின் தான் பொருத்தமானவர்” என்று தெரிவித்திருந்தார்.

மணி சங்கர் அய்யரை தொடர்ந்து உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சியும் இதே கருத்தை தெரிவித்துள்ளது.

இந்தியா கூட்டணிக்கு தேசிய அளவில் மு.க.ஸ்டாலின் அல்லது மம்தா பானர்ஜியை தலைவராக்க வேண்டும் என்று உத்தவ் தாக்ரே சிவசேனா கட்சியின் ‘சாம்னா’ நாளிதழ் தலையங்கம் எழுதியுள்ளது.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 18) திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளனிடம் மணி சங்கர் அய்யரின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறிய கருத்து வரவேற்க வேண்டியது. அவர் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்” என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

General19 hours ago

திருச்செந்தூர் கோவிலில் ரூ.100 விரைவு தரிசன மோசடியை உயர் அதிகாரிகள் கண்காணிக்க தவறியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.

General19 hours ago

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு.

Politics21 hours ago

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா …!

Politics21 hours ago

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Politics24 hours ago

சென்னை சோழிங்கநல்லூர் 198 வட்டக் கழகத்தின் சார்பில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Copyright © 2025 NowTamil.