Connect with us

General

கடல்சார் வரலாற்றில் புதிய சாதனை: இந்தியாவில் முதல்முறையாக வளர்க்கப்பட்ட ‘பேண்டட் மூங்கில்’ சுறாக்கள் (பட்டை மூங்கில் சுறாக்கள்) கடலில் விடுவிப்பு!

சென்னை, 06 ஜூன், 2026 : கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பில் இந்தியா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. விஜிபி மெரைன் கிங்டம், தனது கண்காணிப்பில் வளர்க்கப்பட்ட ‘பேண்டட் மூங்கில்’ (Banded Bamboo) வகை சுறாக்களை இன்று வெற்றிகரமாகக் கடலில் விடுவித்தது. கடல் வளங்களைப் பாதுகாப்பதிலும், பொறுப்பான முறையில் மீன்வளத்தை மேம்படுத்துவதிலும் இது ஒரு முன்னோடித்துவ சாதனையாகும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் திரு. ஏ. ஸ்ரீநாத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கடல்சார் ஆராய்ச்சியாளர்கள், அரசு அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.


இந்தச் சுறாக்கள் விஜிபி மெரைன் கிங்டமின் நிபுணர்களால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டவை. அறிவியல் பூர்வமான வளர்ப்பு முறைகள் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் கடல் வாழ்விடங்களை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.


தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் திரு. ஏ. ஸ்ரீநாத் அவர்கள் பேசுகையில், “கடல் பாதுகாப்பின் அவசியத்தை வருங்கால சந்ததியினருக்குக் கொண்டு சேர்க்கும் இத்தகைய முயற்சிகள் பாராட்டுக்குரியவை. அறிவியல் ஆய்வுகள் மற்றும் மக்களின் பங்களிப்புடன் செய்யப்படும் இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள், இந்தியாவின் கடல் வளத்தைப் பாதுகாக்க மிகவும் அவசியம்” என்று குறிப்பிட்டார்.


விஜிபி குழுமத்தின் தலைவர் திரு. விஜி சந்தோஷம் அவர்கள் கூறுகையில், “பொதுமக்களுக்காகவும், கடல் பாதுகாப்புக்காகவும் விஜிபி மெரைன் கிங்டம் இத்தகைய உன்னதமான திட்டத்தை மேற்கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. கடல் வளத்தைப் பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்குக் கொண்டு சேர்க்கும் இத்தகைய முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்,” என்றார்.


விஜிபி மெரைன் கிங்டமின் இயக்குநர் திரு. விஜிபிஆர் பிரேம் தாஸ் அவர்கள் கூறியதாவது: “விஜிபி மெரைன் கிங்டம் என்பது, எப்போதும் வெறும் மீன் காட்சியகமாக மட்டும் இருந்ததில்லை; இது நமது பெருங்கடல்களை மதிக்கவும், புரிந்துகொள்ளவும், பாதுகாக்கவும் மக்களை ஊக்குவிக்கும் ஒரு உலகத்தரம் வாய்ந்த கடல்சார் இடமாக உருவாக்க வேண்டும் என்ற கனவாகும். வளர்க்கப்பட்ட ‘பேண்டட் மூங்கில்’ சுறாக்கள் மீண்டும் கடலுக்குத் திரும்புவதைப் பார்ப்பது எங்களுக்கு மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் பெருமிதமான தருணமாகும். கடல்சார் கல்வி, பாதுகாப்பு மற்றும் அறிவியல் கற்றலுக்கான ஒரு தளமாக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. இன்றைய இந்தச் சாதனை அந்த நோக்கத்தை மெய்ப்பித்துள்ளது. கடல் வாழ்விடங்களை வருங்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்க, ஆராய்ச்சியாளர்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இணைந்து செயல்பட இந்த முயற்சி ஊக்கமளிக்கும் என்று நம்புகிறோம்.”
விஜிபி மெரைன் கிங்டம் இயக்குநர் திரு. விஜிபிஆர் பிரேம் தாஸ் அவர்கள், “எங்கள் கண்காணிப்பில் வளர்ந்த சுறாக்களை மீண்டும் கடலில் விடுவது மிகவும் நெகிழ்ச்சியான தருணம். கடல் கல்வி, பாதுகாப்பு மற்றும் அறிவியல் ஆய்வுகளுக்கான ஒரு தளமாக விஜிபி மெரைன் கிங்டம் செயல்படுகிறது. இந்த முயற்சி கடல் வாழ்விடங்களைப் பாதுகாக்க மற்றவர்களுக்கும் ஊக்கமளிக்கும் என்று நம்புகிறோம்,” என்றார்.


விஜிபி மெரைன் கிங்டம், கடல்சார் கல்வி, உயிரினப் பாதுகாப்பு மற்றும் பொது விழிப்புணர்வு ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் முன்னணி கடல்சார் பாதுகாப்பு மற்றும் அனுபவப்பூர்வ கற்றல் மையங்களில் ஒன்றாக இது தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. திரு. விஜிபிஆர் பிரேம் தாஸ் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் உருவான இந்த மையம், வெறும் பொழுதுபோக்கு இடமாக மட்டுமல்லாமல், கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல், கல்வி புகட்டுதல் மற்றும் அறிவியல் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபடும் ஒரு தளமாக நிறுவப்பட்டது. கடல் சூழலியலைப் பாதுகாப்பதற்கும், கடல் வாழ் உயிரினங்களின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற அறைகூவலுடன் இந்த நிகழ்வு நிறைவடைந்தது.

விஜிபி மெரைன் கிங்டம் குறித்து:
விஜிபி மெரைன் கிங்டம், இந்தியாவின் முதல் ‘வாக்-த்ரூ’ மீன் காட்சியகம் மற்றும் நாட்டின் முன்னணி கடல்சார் கல்வி மற்றும் பாதுகாப்பு மையங்களில் ஒன்றாகும்.

சென்னையின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள இந்த மையத்தில், கடல் மற்றும் நன்னீர் வாழ் உயிரினங்களின் பல்வேறு இனங்கள் உள்ளன. ஆராய்ச்சி, கல்வி மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு மூலம் கடல் குறித்த விழிப்புணர்வு, அறிவியல் கற்றல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை இது தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. முன்னோடி பாதுகாப்புத் திட்டங்கள், வளர்ப்பு முயற்சிகள் மற்றும் நேரடி அனுபவக் கற்றல் மூலம், கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பாளர்களாக மாற பார்வையாளர்களை விஜிபி மெரைன் கிங்டம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025 NowTamil.