Connect with us

Government

வந்தே மாதரம்: பாஜகவின் இரட்டை நிலைப்பாடு!

மத்தியில் ஆளும் கட்சி, 2028ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் நாகாலாந்து மாநிலத்தில் அதிகாரத்தைத் தக்கவைக்க விரும்பினால், வந்தே மாதரம் குறித்த அந்த மாநிலத்தின் கருத்துக்கள் பற்றி மௌனம் காக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் விரக்தியில் தங்கள் கைகளைப் பிசைந்துகொண்டிருக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் பொன்னானதொரு வாய்ப்பை நழுவவிட்டிருக்கிறார்கள்.

பள்ளிகள், கல்லூரிகளில் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடப்படுவதை காங்கிரஸோ அல்லது வேறு ஏதேனும் ஒரு எதிர்க்கட்சியோ எதிர்த்து அறிக்கை வெளியிட்டிருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். தாங்கள் கிறிஸ்தவர்கள் என்றும், அதனால் துர்க்கை, சரஸ்வதி மற்றும் லட்சுமி போன்ற இந்து தெய்வங்களாக உருவகப்படுத்தப்படும் ‘தாய் நாட்டை’ ஏற்க முடியாது என்றும் அந்தப் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூறுவதாக நினைத்துப் பாருங்கள். பட்டமளிப்பு விழாவின்போது வந்தே மாதரம் இசைக்கப்பட்டபோது மாணவர்கள் இருக்கைகளை விட்டு எழ மறுத்ததை எண்ணிப் பாருங்கள்.

இவை கற்பனையான சூழ்நிலைகள் அல்ல. கடந்த வாரம் நாகாலாந்தில் இவை உண்மையிலேயே நடந்தன. பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய தேசியப் பாடலுக்கு இழைக்கப்பட்ட இத்தகைய ‘அவமானத்தை’ பாஜக தலைவர் ஒருவர் பொறுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால், அது நரக வேதனைக்கு ஒப்பானது. அதுவும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன்பு இது நடப்பது இன்னும் கொடுமை. வேறு ஒரு சூழலாக இருந்திருந்தால், அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியை தேசவிரோதிகள், அர்பன் நக்சல்கள், ‘முஸ்லிம் லீக்’ என்று பாஜக தலைவர்கள் முத்திரை குத்தியிருப்பார்கள்; அரசாங்கத்தைக் கலைக்கக்கூடக் கோரிக்கை விடுத்திருப்பார்கள். ஆனால், இந்த நிகழ்வில் பாஜக தலைவர்கள் வாய் மூடி மௌனமாக இருக்கிறார்கள்; இதைக் கவனிக்காததுபோல் கடந்து செல்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025 NowTamil.