Connect with us

Politics

கோவையில் போட்டியிடுவது ஏன்.. செந்தில் பாலாஜி பளீச் பதில்!

கோவையில் கடந்த முறை 10 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை திமுக கூட்டணி இழந்த நிலையில் இந்த முறை எனக்கு கோவையில் போட்டியிட முதல்வர் வாய்ப்பு வழங்கியுள்ளார். அவரது ஆணைக்கிணங்க கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் உறுதியாக வெல்ல உழைக்க இருக்கிறோம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் இன்று முதல் முறையாக கோவை வந்த செந்தில் பாலாஜி காந்திபுரம் பகுதியில் தேர்தல் பணி குழு அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த செந்தில் பாலாஜிக்கு பூக்கள் தூவி திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் வரவேற்றனர்.

பின்னர் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நான், தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்துள்ளேன். இந்த தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றி பெறும். ஓரணியில் தமிழ்நாடு, உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளை சிறப்பாக திமுகவினர் செய்துள்ளோம். இதனால் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

அந்த வகையில் தமிழக மக்கள் திமுகவுக்கு பிரம்மாண்டமான வெற்றியை தரத் தயாராக இருக்கிறார்கள். கடந்த முறை 10 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை திமுக கூட்டணி இழந்திருந்தது. இதனால் கரூரில் போட்டியிட்ட எனக்கு கோவையில் போட்டியிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாய்ப்பு வழங்கியுள்ளார். அவரது ஆணைக்கிணங்க கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் உறுதியாக வெல்ல உழைக்க இருக்கிறோம்” என தெரிவித்தார்.

அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எனகூறியுள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு , “அவர்கள் தோற்று விடுவோம் என்றா சொல்லப் போகிறார்கள்? கடந்த முறை முதலமைச்சர் கோவை வந்தபோது பம்ப்செட் உற்பத்தியாளர்கள் தங்கள் தொழிலுக்கு பல்வேறு கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாடு முழுவதும் 20 லட்சம் விவசாயிகளுக்கு பம்பு செட்டுகள் புதிதாக மாற்றி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை பம்ப் செட் உற்பத்தியாளர்கள் வரவேற்றுள்ளனர். இது போன்ற சாதனைகள் காரணமாக கோவை மிகப்பெரிய வளர்ச்சியை அடையும். கோவை தெற்கு தொகுதியை விட்டுவிட்டு பாஜக வானதி சீனிவாசன் வடக்கு தொகுதிக்கு ஏன் சென்றார்கள் என அவர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.

எனக்கு கோவை வேறு கரூர் வேறு அல்ல. கரூர் அரவக்குறிச்சி தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறேன். இப்போது கோவை தொகுதியை எனக்கு வழங்கி இருக்கிறார்கள். அதிலும் கட்டாயம் வெற்றி பெறுவேன்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சில தொகுதிகளை கோவையில் திமுக இழந்தது. அதன் பின்பு அதிமுக எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை அவர்களிடமே கேட்க வேண்டும். பொதுமக்கள் அவர்களை நம்பி கட்சியில் இணைந்து இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்புங்கள். கோவை தெற்கு தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அடுத்தடுத்து அறிவித்து செயல்படுத்துவோம்.

கோவையில் ஜிடி நாயுடு மேம்பாலம், செம்மொழி பூங்கா திட்டம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் 8,700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நான் எந்த வேட்பாளரையும் குறைத்து மதிப்பிடுவதற்காக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. நாங்கள் திமுக அரசு மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சாதனைகளை கூறி அதனால் பலர் அடைந்த மற்றும் பலனடைய போகும் பயனாளிகளை எங்களுக்கு ஆதரவான வாக்குகளாக மாற்றுவோம்.” என தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

General18 hours ago

திருச்செந்தூர் கோவிலில் ரூ.100 விரைவு தரிசன மோசடியை உயர் அதிகாரிகள் கண்காணிக்க தவறியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.

General18 hours ago

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு.

Politics20 hours ago

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா …!

Politics20 hours ago

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Politics23 hours ago

சென்னை சோழிங்கநல்லூர் 198 வட்டக் கழகத்தின் சார்பில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Copyright © 2025 NowTamil.