Politics
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி,திமுக வேட்பாளர் S.A.சத்யா வாக்கு சேகரிப்பு…!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட பி.எஸ்.திம்மசந்திரம், வானமங்களம், கே.என்.தொட்டி, எலுவப்பள்ளி, பேரிகை, பேரிகை காலணி, பேரிகை செக்போஸ்ட் கண்டரப்பள்ளி, மாருதி நகர், சூலுகொண்டா, மகாதேவபுரம்,

சிங்கரப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் S.A.சத்யா கொளுத்தும் கோடை வெயிலையும் பாராது கிராமம் கிராமமாக, வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் மற்றும் தற்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அறிவித்துள்ள வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தார்.
இந்த நிகழ்வில், கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் கோபிநாத், திமுக- வின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் மேனாள் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் மற்றும் கூட்டணி கட்சியினர் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.