Connect with us

Government

காங்கிரஸுக்கு ராஜ்யசபா எம்.பி சீட் : முதல்வர் விஜய் அறிவிப்பு!

தமிழக வெற்றி கழக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ராஜ்யசபா எம்பி யாக இருந்த சிவி சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியாக இருக்கும் அந்த இடத்துக்கு வரும் ஜூன் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் அதிக உறுப்பினர்களை பெற்றுள்ளதால், அந்தக் கட்சி நிறுத்தும் வேட்பாளரே தேர்தலில் வெற்றி பெறுவார்.

எனினும் இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி மூன்று நாட்கள் ஆகி இருக்கும் நிலையில் வேட்பாளரை அக்கட்சி அறிவிக்காமல் இருந்தது.

இந்த சூழலில் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் மேலிட பொறுப்பாளருமான கிரிஷ் சோடங்கர், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை இன்று சந்தித்து பேசினார்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரசுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்க முதல்வர் விஜய் பரிசீலினை செய்வதாக கூறியிருக்கிறார் என்று கூறினார்.

இந்த சூழலில், வரும் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களை உறுப்பினருக்கான தேர்தலில் தமிழ்நாட்டில் தமிழக வெற்றி கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று விஜய் அறிவித்துள்ளார்.

அதன்படி தமிழ்நாட்டில் இருந்து பிரவீன் சக்கரவர்த்தி ராஜ்யசபா எம் பி ஆகிறார் என தகவல்கள் வருகின்றன.

 மாநிலங்களவையில் காங்கிரசுக்கு 29 எம்பிக்கள் உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை 30ஆக அதிகரிக்கவுள்ளது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025 NowTamil.